பல்லவி
நீ 1பத3 பங்கஜமுலனு நே நெர நம்மினானு
அனுபல்லவி
2பூ4 பாலுல க3ர்வம்பு3லணசு கொரகா
பரமேஸ்1வரு சாபமு த்3ருஞ்சின (நீ)
சரணம்
சரணம் 1
கோபமுதோ முனு தாபஸியிச்சின
ஸா1பமுன அஹல்ய அனு-தி3னமு
சாப ராதி தனு 3தாபமோர்வ
லேனாபெனு கனி பரிதாபமு தீர்சின (நீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ பத3/ பங்கஜமுலனு/ நே/ நெர/ நம்மினானு/
உனது/ திருவடி/ தாமரைகளினை/ நான்/ மிக்கு/ நம்பியுள்ளேன்/
அனுபல்லவி
பூ4/ பாலுல/ க3ர்வம்பு3ல/-அணசு கொரகு/-ஆ/
புவி/ ஆள்வோரின்/ செருக்கினை/ அடக்குவதற்காக/ அந்த/
பரமேஸ்1வரு/ சாபமு/ த்3ருஞ்சின/ (நீ)
பரமேசனின்/ வில்லினை/ முறித்த/ உனது...
சரணம்
சரணம் 1
கோபமுதோ/ முனு/ தாபஸி/-இச்சின/
சினத்துடன்/ முன்பு/ தவசி/ இட்ட/
ஸா1பமுன/ அஹல்ய/ அனு-தி3னமு/
சாபத்தினால்/ அகலிகை/ நாளும்/
சாப ராதி/ தனு/ தாபமு/-ஓர்வ/
கருங்கல்/ உடலின்/ வெம்மை/ தாள/
லேனி/-ஆபெனு/ கனி/ பரிதாபமு/ தீர்சின/ (நீ)
இயலாத/ அவளை/ கண்டு/ பரிதாபத்தினை/ தீர்த்த/ உனது...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பத3 பங்கஜமுலனு - பத3 பங்கஜமுல.
3 - தாபமோர்வ லேனாபெனு - தாபமோர்வனியாபெனு.
Top
மேற்கோள்கள்
2 - பூ4 பாலுல க3ர்வம்பு3லணச - புவியாள்வோரின் செருக்கினை யடக்க - விசுவாமித்திரர், ஜனக மன்னன் அவைக்கு இராமனையும் இலக்குவனையும் அழைத்துக்கொண்டு வந்து, ஜனகரிடம் சிவ வில்லினைக் காட்டுமாறு கூறினார். அதற்கு ஜனகர், தேவர்கள், தானவர்கள், அரக்கர்கள், கந்தருவர்கள், யட்ச, கின்னரர்களாலும் நாணேற்ற முடியாத வில்லை மனிதர்களால் எங்ஙனம் இயலும் என்று ஏளனமாகக் கேட்டான். ஆயினும், வில் கொணரப்பட்டது. விசுவாமித்திரர் 'இராமா வில்லினை நோக்குவாய்' என்று ஆணையிட்டார். அதன் பின், அவையோர், என்ன நடந்தது என்று உணரும் முன்பே, இராமன் வில்லினை நாணேற்ற, அது உடைந்தது. இதனைத்தான், தியாகராஜர், 'புவியாள்வோரின் செருக்கினை அடக்க' என்று கூறுகின்றார்.
Top
4 - விரோசன ஸுது மதி கலிகி3ன ப4யமு - பரிதி மைந்தனின் மனதில் எழுந்த அச்சம் - சுக்கிரீவனுக்கு இராமனின் மகிமைகளைப் பற்றித் தெரியாது. எனவே, மிக்கு வலியவனாகிய தனது அண்ணன் வாலியை எதிர்த்து இராமன் போரிட்டு, அவனை வெல்ல முடியுமா என்று மிகவும் ஐயப்பட்டான். வாலியின் வலிமையினைப் பற்றி திரும்பத் திரும்ப உரைக்கும் சுக்கிரீவனிடம், இராமன், தான் என்ன செய்தால் அவனுடைய ஐயம் தீரும் என்று கேட்டான். அதற்கு சுக்கிரீவன், அங்குள்ள பெரும் சால மரங்களின் கிளைகளை உலுக்கியே, இலைகளையெல்லாம் வாலி உதிரச் செய்வான் என்றும், அவன் அந்த சால மரங்களை வில்லினால் துளைக்க வல்லவன் என்றும் கூறியதுடன், அங்கு கிடந்த, துந்துபி என்னும் எருமையரக்கனின் மலை போன்ற உலர்ந்த உடலையும் காட்டி, இவனை வாலி கொன்றான் என்றான். உடனே இராமன், அந்த உடலை தனது கால் கட்டை விரலால் உதைத்து 10 யோஜனை தூரத்தில் எறிந்தான். பின்னர் ஏழு சால மரங்களையும் ஒரம்பினால் துளைத்து அந்த அம்பு திரும்ப தன் அம்பறாத்தூணியை வந்தடையச் செய்தான். அதன் பின்னரே, சுக்கிரீவனின் ஐயம் தெளிந்தது.
Top
6 - பி3டௌ3ஜ - பி3டௌ3ஜஸ் அல்லது விடௌ3ஜஸ் - இந்திரனின் பெயர் – (7183)
6 - பி3டௌ3ஜ அவரஜ - இந்திரனின் பின்தோன்றல். 'உபேந்திரன்' எனப்படும் விஷ்ணுவின் வாமன அவதாரத்தினைக் குறிக்கும்.
Top
விளக்கம்
5 - பெனு தல தன்னின - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. 'பெனு' என்பதற்கு 'பெரிய' என்றும், 'தல' என்பதற்கு 'தலை' யென்றும், 'தல தன்னின' எனபதற்கு 'மிதித்த' என்றும் பொருளாகும். இங்கு கூறப்படும் நிகழ்ச்சி, 'வால்மீகி ராமாயண'த்தின்படி, துந்துபியின் உலர்ந்த உடலை, இராமன், தனது கட்டை விரலால் உதைத்து எறிந்ததாகும். எனவே, 'தன்னின' (உதைத்த) என்ற சொல் சரியானாலும், 'பெனு தல' என்பது ஐயத்திற்குரியது. இவ்விடத்தில், தியாகராஜர், 'அத்யாத்ம ராமாயண'த்தினைப் பின்பற்றியதாகத் தோன்றுகின்றது. 'அத்யாத்ம ராமாயண'த்தின்படி (கிஷ்கிந்தா காண்டம், முதல் அத்தியாயம்), வாலி, துந்துபியைக் கொன்று, அவன் தலையைத் திருகி எறிந்தான் என்றும், அந்தத் தலை, மதங்க முனிவரின் ஆசிரமத்தருகில் வந்து வீழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இவ்விடத்தில், 'பெனு தல' என்பது 'பெருந் தலை' என்று பொருளாகும்.
7 - ஜ்யா-வர - சில புத்தகங்களில் இதற்கு 'அரசர்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடத்தி்ல் மும்மூர்த்திகளில் ஒருவரான, பூமி தேவியின் மணாளனாகிய, 'விஷ்ணு'வைக் குறிக்கும்.
Top
பரமேசன் - உருத்திரன் - சிவன்
தவசி - அகலிகையின் கணவராகிய கௌதம முனிவர்
இந்திரன் மகன் - வாலி
பரிதி மைந்தன் - சுக்கிரீவன்
துந்துபி - எருமை அசுரன் - வாலியால் கொல்லப்பட்டவன்
புவிமகள் - சீதை
இந்திரன் பின்தோன்றல் - உபேந்திரன் - வாமனர்
பூதேவி மணாளன் - அரி
Top